இல்லாமலலும் இருப்தாயும் மிதக்கும்
என் மனமே!!!!
கேள் மனமே!
காலை வெயில் வெளிச்சங்களில் தோள் மீது கை போட்டு
கடற்கரைச்சாலைகளில் கூட வருகிறாய்.,
பேரின்பம் இது தான் என என்னோடு
பேசிக்கொள்கிறாய்.,
பூமியில் கால் உதைத்து மேகங்களையெல்லாம் மேவச்செய்கிறாய்.,
பூக்கள் விரியட்டும் என இடம் கொடுத்து
என்மீது மென்மைகள் பூக்கச்செய்கிறாய்,,
என் மடியில் சாய்ந்து கொண்டே
இறப்பையும் கடப்போம் என்கிறாய்.,
விழுந்து விழுந்து இதயக்கரையெல்லாம் மிகந்து செல்கிறாய்.,
இது போதும்,இனி வாழ்வேன்
சத்தமாய் பாடிக்கொள்கிறேன்..
அதோ நீ அங்கிருக்கிறாய்
என்னைத்தான் பார்க்கிறாய்
ஏதோ ஆயத்தம் செய்கிறாய்
நான் அமைதிகொண்ட பொழுதொன்றில்
எனை நோக்கி ஆவேசமாய் பாய்கிறாய்.!
" கொல் "
என்கிறாய்,
புதை என்கிறாய்.
என் பொம்மைகளை பறித்துவிட்டு
தீப்பந்தம் கொடுக்கிறாய்..
எரிக்கச்செய்கிறாய்
"செத்துப்போ"
என்கிறாய்.
சன்நியாசம் தான் சரி.......!
பற்று அறு...!
தனித்திரு...!
பாசமே வேசம்...!
ஏகாந்தம் தான் இனிமை....!
புரியவில்லை
உன் சித்தம்!!!
ஏன் இப்படி????????
இதையும் நீதான் சொல்கிறாய்.
இப்போதெல்லாம் இதைத்தான் சொல்கிறாய்.!
அத்தனை ஈரங்களையும்
தனித்திருந்து உறிஞ்சிவிட்டு
பரட்டை தேசமாய் என்னை பாளம் போடுகிறாய்.
மறுபடியும் கண்ணீர் ஊற்றுகிறாய்.
மண்டியிட்டு மன்னிப்புக் கோருகிறாய்..!
விரல் மறைத்து குடை செய்து
ஒலிவக்கன்று தருகிறாய்.
நீயே நட்டும் வைக்கிறாய்.
என் இனிய நண்பனே!
என் மனமே!!
மயங்காதிரு!!!
பொறுத்திரு,சகித்திரு!
வென்றுவிடச்சொல்லி விட்டு
நீயே கொன்று போனால்..........:(
இறுகி இறுகி கட்டிப்படாதே,
கொஞ்சம் ஈரம் வை...!
இயன்ற வரை முளைத்துக்கொள்கிறேன்....!
-அதிசயா-