Saturday, July 20, 2013

வெள்ளைப் பகலொன்று...!



வெள்ளைச் சுவர்களால் அலங்கரித்த புகையிரதமொன்றில் 

நகர்ந்துகொண்டிருக்கிறேன்.

தொலையிலிருந்து வெளிர் நீல இறகொன்று மிதந்து வருகிறது.

ஆங்காங்கே இருந்த இரத்க்கறைகளையெல்லாம் துடைத்துவிட்டு

வெள்ளை பூசிப்போகிறது..!

ஒருக்களி;த்து அமர்ந்திருக்கிறேன்-என்

உச்சியில் இறங்கிய இறகொன்று வேர்விட்டு

கேசக்கான்கள் வழி என்னுள் முளைக்கத்தொடங்குகிறது

வெள்ளைப்பூப்பூக்கும் ஒருநேசாவரமாய்.!

இப்படியாய் ஒவ்வோர் இறகுகளும் இந்த ரயில் பணயத்தில்

இணைந்து கொள்கின்றன.

இப்போது கத்தி இல்லை ,ரத்தம் இல்லை

கசிந்து கொண்டிருக்கும் இசையொன்றில்

கரைந்து வருகிறது பல இதயத்தின் இராகங்கள்...!

நிச்சயமாய் நம்புகிறேன்..       

விடை பெறப்போகும் கடைசிப் பகல் ஒன்றில் இந்த தேசமே

வெள்ளையாய் மாறும்!

இதயத்தின் இராகங்கள் எதிரொலித்தபடியே இருக்கும்

அப்போது நான் கையசைத்து விடைபெறுவேன்..>

சொந்தக்காரியாய்..!

தேசக்கொடிஅல்ல-நேசத்தின் கொடியொன்று அன்று வழிநடத்தும்

மானிடத்தின் சந்தோச ஊர்வலங்களை..!

நேச மரங்களை சுமக்கும் மானிடத்தின் செடியெல்லாம்

வெள்ளையாய் பூப்பூக்கும்-அதில்   

கனிந்து கொண்டிருக்கும் விடுதலையின் விதைகள்.!

md;Gld;
-mjprah-
Related Posts Plugin for WordPress, Blogger...