Thursday, August 20, 2015

ப்ரியமுள்ள...........!


ப்ரியமே...!
இந்தக்கூதிர் காலத்தின் ஈற்று நாழிகை வரை உனை அங்கேயே தரித்துக்கொள்்சினம் உண்டாக்காத மஞ்சள் வெயில் காலத்தின் பிரம்மிப்புக்களை பற்றி முன்பொரு ஓலையில் நீ வரைந்ததாய் ஞாபகம்ப்ரியக்குழந்தாய் உணரப்படாத கொண்டாட்ட கோஷங்களை காட்டிலும் மௌனம் மட்டுமே அடர்ந்துள்ள தனிமை வெளி ரம்மியமானது என்பதை உணர முயல்வாயாக

வேகமான இந்த ஓட்டங்களில் உனக்குளிருக்கும் அந்த கலைஞனை உயிர்ப்பிக்க முயன்றுபார்
அறிவாயா வானமே கூரையென்றபடி மெதுவாய் ஓர் ராகம் உண்டுபண்ணியபடி மூச்செடுப்பதில் உள்ள சுகத்தை.முதலில் உன்னை செரிமானம் செய்துவிடு்.பிறகு புதிதாய் ஓர் உயிர் ஊறும் பார்
இதை நிச்சயமாய் நீ உணர்வாய்.இக்கூதிர் காலத்தின் அழுகைகளில் எனை கரைத்துக்கொண்டிருக்கிறேன்.இது தீர்ந்ததும் நானும் உன் மலைத்தேசம் புறப்படுவேன்.அதுவரை எல்லாப்புலர்வுகளையும் உள்வாங்கு

எந்தக்கண்டிப்பும் உனக்கு இல்லை்.கையிவிருந்து புறப்பட்ட சோப்குமிழிகளை  போல் பொழுதுகள் உனை இயக்கும் திசையெங்கும் போ...எந்த ஆசானும் தரமுடியாத ஆச்சர்யங்களை இக் கணங்கள் ஊற்றிக்கொண்டிருக்கின்றன.உன்னுள்ளே வாழும் அக்கலைஞன் மீண்டு எழுகிறான் பார்.மீண்டுமொருமுறை இது பற்றி எழுதுவது வாய்க்காது போகலாம் ப்ரியமே
நான் காண நினைத்த பெரு வெளிச்சத்தின் உன்னால் வாழமுடியுமாயிருக்கிறது.என்னால் தீர்மானிக்க முடியாது போன என் இளமை  போலன்றி உன் தீர்மானங்களில் சுதந்திரம் நிறைந்து கிடக்கிறது.என்னை நனைக்கட்டும் என நாளும் ஏங்கிய ஆதித்துமி உன் கேசக்கோட்டோடு வழிகிறது.என் பிரியமே எல்லைகள் நிறுவப்பட்ட ஆயுளில் தித்திப்பான இப்பொழுதுகளை இட்டு நிரப்பிக்கொள்.உன்னை சூழ்ந்துள்ள பெருவிருட்சங்களின் இனிமையான உன் பால்யத்தின் குறிப்புக்களை பொறித்து வை

என் ப்ரியமே மானுடர் யாருமேயில்லை உனை சூழ.நிர்ப்பந்தங்கள் ஏதுமின்றி உன் மீதமுள்ள நாட்களை நிறுவிக்கொள்.புரண்டெழு குதி.பள்ளத்தாக்குகளெங்கும் உன் குழந்தைமையை அணைத்தபடி புரண்டெழு.நீ ஆண் என்றோ பெண் என்றோ விபரிக்க வேண்டியதில்லை ப்ரியமே
எப்பொழுதில் எதுவாக தோன்ற பிடிக்கிறதோஅதுவாய் இயங்கிக்கொள்.திருமணம் பற்றியோ என்ன குழந்தையை பிரசவிப்பதுஎன்றோ எந்தப்பேச்சுக்களின் வாடையும் சுமைபோல் உன்னை அழுத்தாதிருக்கட்டும் என ஆசீர்வதிக்கிறேன்.நீ என்பது நீ மட்டுடே என்ப்ரியமே.எதற்காயும் உனை தியாகிக்காதே.நீ என்பது நீமட்டுமே.அப்படியே இருந்துவிடு.

இதுபற்றி இன்னும் பேசவே ஆசையாய் இருக்கிறேன்.தீராக்காதலாய் இக்காட்சிகள் எனை தூண்டிக்கொண்டிருக்கின்றன.மொழிபெயர்ப்பு கவிதைகளை போல ஏதோ ஒரு ரகசியதை நோக்கி விரையத்தூண்டும் இக்கணங்கள்.

இயல்பான புன்னகை ஒன்றும் கூச்சமற்ற துயர அழுகை ஒன்றும் ஓரிடத்திலிருந்தே புறப்படுகின்றன.எனில் எப்புள்ளியில் இப்போது வாழ்கிறாய் நீ்??முன் இரவிலும் அதிகாலையிலும் பார் எத்தனை வர்ணப்பிரிகைகள்.வெளிகளில் தோன்றும் காற்றும் இக்கிளிகளின் பறத்தல்களும் எத்தனை முறைநிகழ்ந்தாலும் அத்தனை தடவையும் புதினமே...!பட்சிகளின் இறக்கைக்குள் சென்றுபார்.நேசிப்பின் மொழி அறிந்த அப்பறவையின் கதகதப்புத்தான் கருவறையை பிரதி பண்ணும்.அனுமதி்்்உன் ஆகாரத்தில் தானியங்களை அனுமதி்.அந்திமத்தின் நாட்களை போல் ஆரம்பத்தின் வழக்கங்களும் அவசியமே.

என் பிரியமே நாட்கள் மீளெழுவதில்லை நீ நன்கறிவாய்.அந்தி நாட்களில் நீ இசைக்கப்போகும் புல்லாங்குழல் கீதம் உன்னுடையதாய் மட்டுமே இருக்கட்டும் பிரியமே ஊற்றுக்களில் சுரக்கும் நேசத்தீர்த்தங்களை குடி,உனக்கான ராகங்களை நீ மட்டுமே தேடிக்கொள் உன்இஷ்ரப்படி.என் பிரிய சிநேகிதா இந்நாட்கள் பற்றி ஒரு குறிப்பெழுதி கற்றோடு விடுவாயா?
அழுது தீர்ந்துவிட்ட கடைசி நாளில் பேதக்கோபங்களற்று .உள்ளூறும் நெருப்புகளேதுமின்றி நான் நிதானமாவேன் .

அப்போது உன் குறிப்பு எனை இயக்கி அங்குகூட்டிப்போகும்
அதுவரை அங்கேயே தரித்திரு ப்ரியமே.

்்்அதிசயா்்்்

Monday, August 17, 2015

கடலாடிய கதைகள்

சொந்தங்களே அன்பு வணக்கம்...!
பயணங்கள் என்பது வெறும் களைப்பு சார்ந்ததில்லை அது அற்புதமான அனுபவத்தின் தூதன் என்று நம்புகிறீர்களா??இல்லையெனில் ஒருமுறை   நம்பியபடி சிறு பயணம் போய் வாருங்கள்.என் பல்கலை நண்பர்களுடன்  கிழக்கிலங்கையின் கடல்சார் இன்பங்களை துய்த்துக்கொண்டிருந்தோம்.
டலாடும் அனுபவங்கள் கிளர்ச்சிமயமானது.பொழுதொரு எழிலென தன்னை உடுத்திக்கொண்டிருக்கிரும் கடல் மடிக்குள் தான் எத்தனை  இன்பங்கள்.மீன்களோடும் கடற்கற்களோடும் கலந்திருந்தோம்.
கண்ணாடி போலொரு தண்ணீர் தேசத்தின் கால்களை கற்கள் பதம் பார்க்க நாங்கள் வலிமறந்து கடலாடினோம்.பின் மீண்டும் மற்றொலு கடலில் எங்கும் கண்டிராத குளிர்மையான நீரில் சிறு குழந்தைகள் போல் விழுந்து விழுந்து புரண்டுகொண்டிருந்தோம்.நம்புவீர்களா???அன்றே அங்கே சிலர் அதிதீவிரமாக நீச்சலடித்துக்கொண்டிருந்தோம் முதல்முதலில்.ஏதேதோ இராகங்களை மிக உல்லாசமாய் இசைத்தபடி  தோள்மீதும் மார் மீதும்  கடலில் உலவிக்கொண்டிருந்தோம்.
பெருத்த சந்தோஷம் நிறைந்த கொண்டாட்ட பயணம் அது.எப்போது நினைத்தாலும் என்றென்றைக்குமாய் கடலின் அடர்த்தி கொண்டு கனம் கூடிய நட்பின் அடர்த்தியில் கடலாடினோம்.



தொலைவுப்பயணங்களின் நினைவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது இந்தப்பொழுதுகள்
என் ப்ரியத்தின் நண்பர்களே...!
நேற்றய நீர்ப்பயணம் முழுவதும் சுயாதீனமாய் மிதந்துகொண்டிருந்தோம் என்பதை நினைத்து இன்னும் பிரம்மித்துக்கொண்டிருக்கிறேன் இந்த சாலை முழுவதும்.

அந்தப்பாடல்களில் சுருதி இல்லை
சாலை உணவகங்களில் குளிரூட்டி இல்லை
ஆனாலும் கடல்போலவும் மலையை ஒத்ததுமான
விசாலமான குளிர்மையில் கிறங்கிக்கிடந்தோம்♪
மூழ்குவதும் பின் மாறிமாறி தாங்குவதுமாக உச்சி குளிந்தோம்.
உயரங்களில் ஏறி பின் நட்பில் கைகோர்த்து ஆழங்களில் சென்றிருந்தோம்.

ஆணென்றும் பெண்ணென்றும் யாதொன்றும் அறியாத நேசத்தில் நட்பு நட்பு என்று சொன்னபடி
அந்தப்பொழுதுகளை கொண்டாடிக்கொள்வோம்♪
தேவதைகளே எங்களை ஆசீர்வதியுங்கள் எல்லோரும் என்றென்றும்

வாழ்கவென♪♪

Monday, July 20, 2015

அற்புதங்கள் நிறைந்த குவளைகள்-இது நமக்கான சந்திப்பு

என் ப்ரியத்திற்குரியவனே....!
இந்தப்பயணங்கள் பற்றிய குறிப்புக்களில் உன்னை இந்த இனிப்பான கிறக்கம் தருகின்ற பானங்களோடு வரைந்து வைக்கப்போகிறேன்.இத்தனை தொலைவு நடந்து விட்டேன்.பின்னும் இளைப்பாறுதல் பற்றிய எந்த எண்ணமும் தோன்றாமலிருக்கிறது என்பதை தாண்டிய சுவாரஸ்யம் ஏதுமுண்டோ.எப்போதேனும் உண்டாகக்கூடிய இந்தப்பயணத்தில் என் கூட வரும் வழிப்போக்கனே...!பெறுமதி மிக்க இந்த வாழ்க்கையின் கொண்டாட்டமான பொழுதுகள் இன்னுமாய் நீளக்கடவது.

என் அபூர்வ பிரயாணியே..!
இந்த சாலை எங்கிலும் நான் அதிகமாக அவதானித்தது சிறு பையன்களையும், அவர்களை இலாவகமாய் உருட்டிச்செல்லும் அந்த வளைய சில்லுகளையும் தான்.இப்படித்தானே இந்த சாலைகள் அதன் திசைகளின் எங்களை இயல்பாய் கூட்டிப்போகிறது.

மூன்றாவது சாலை வளையும் போது தான் நீ வெறும் வழிப்போக்கனல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.அப்போது தான் அந்த இனிப்பான பூக்களை சொரியும் மரத்தடியில் அமர்ந்தபடி நேசங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.பின்னாளில்  நீ கூட மென்மையான இதழ்களை கொண்ட மலர்தருவாக மாறியிருந்தாய் என்பதே உண்மை.பயணங்களில் இரவு பற்றிய பயங்களோ,சாத்தான்கனை விரட்டும் மந்திரங்கள் பற்றியோ அதிகமாய் நாங்கள் ஆலோசித்ததில்லை.எப்போதைக்குமான தேவ தேவன்களை உருவாக்கி அவர்களின் சிறகுகளை ஆராதித்தபடி பயணத்தை தொடர்ந்துகொண்டிருந்தோம்.

அறிவாயா ப்ரியமே....
அப்போதே நினைத்து விட்டேன் இனி உன்னை பிரயாணி என சொல்வதில்லையென.வாழ்தலை தண்டனையாக சுமந்த காலங்களிலிருந்து மீண்டு, இந்தப்பணயம் முழுவதுமாய் மிருதுவான வாழ்தல் எங்களின் கைகோர்த்து வருகிறது.இந்தப் பனிபொழுதுகளில் உன் கவிதைகளை நினைவுகூர்ந்து குளிர்காய்ந்து கொள்கிறேன்.நீயும் அப்படியேஅப்படித்தான்.
உண்மைதான் பெருத்த கனவு ஒன்றை சுமப்பது அதீத பாரமாகிறது.அதனால் தான் சிற்றெறும்பின் வெல்லக்கட்டிகள் போல் இனிப்பான சாத்தியமான குட்டிக்குட்டி கனவுகளை இந்த சாலை எங்கிலும் பின்னியபடி போகிறோம்.

ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் காட்டாறு போல நான் பாய்ந்தும் உருண்டும்போனேன்.இப்படியான பள்ளத்தாக்குகள் மென்மையாகவும் மிக விசாலமாகவும்  எங்களை இயக்குகிறது.முன்பெல்லாம் என் தோல்விகளுக்கு யாரேனும் இப்பள்ளத்தாக்குகளை உதாரணம் காட்டியிருந்தால் அத்தோல்வியை வெற்றியை காட்டிலும் பெரியதாய் கொண்டாடியிருப்பேன்.

இன்று இந்த சிகரத்தை மேவ வேண்டிய உயிர்ப்பை தந்தது அந்தப்பள்ளத்தாக்குகளே.என் பச்சைத்தோழியரோடு சேர்ந்து நானும் நீயும்எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பார் .இந்த விருந்தின் இறுதியில் நிலா மட்டும் ஒளிர்கையில் மற்றொரு புகைப்படடெடுத்து இங்கேயே மாட்டிவிட்டுப்போவோம்.சந்தோஷங்களின் சாட்சியாய்.

இப்போது இந்த உச்சியில் இருந்து கீழே பார்க்கையில் அபத்தமேதுமின்றி நீயும் நானும் நேசமாய் விரல்பிடித்து வந்த காலங்கள் கோலமாய் விரிகின்றன.ஆணென்றோ பெண்ணென்றோ தோன்றாமல் எதுவாய் இருக்க ப்ரியப்பட்டோமோஅதுவாகவே நடந'து வந்தோம்.இங்கு விரசங்கள் எதுவுமேயின்றி தனியே நேசம் என்ற ஒன்றே எங்களை நடத்தி வந்தது.குதித்தோம் காற்றின் லயத்தோடு குதித்து நடனமாடினோம்.அட்சரங்களை தியாகம் செய்து விட்டோ ஏதேதோ பாடினோம்.போதை கொண்டவர்கள் போல..

என் ப்ரியத்தின் ப்ரியமே..!இந்த இரவில் நம் இருதயத்திடமாய்  பிராத்தனை என்று சொல்லிவைப்போம்.
என் ப்ரியத்திற்குரியவனே நம் நேசத்தின் மெதுமைக்குள் நம் கைகளை ஒன்றாய் ஏந்தியபடி  சொல்வோம்....


என் இருதயமே..........!அதீத சுதந்திர வீரும்பிகளான எங்களின் பின்னைய நாட்களில்பெருத்த தனிமையோ சலிப்போ தோன்றாதிருக்கட்டும்.இந்த சாரலின் வாசங்கள் நாசிகளில் நிறையும் போதெல்லாம்எங்கிருப்பினும்  எங்களுக்குஇப்பயணங்களை நினைவுபடுத்துவாயாக.இப்போது கூட வரும் இந்த அழகிய பாதச்சுவடுகள்என்றென்றைக்குமாய் பரிபூரண அழகுறட்டும்.சூழ்ந்திருக்கும் இந்த மலைகள் சாட்சியாய்எங்களை ஆசீர்வதிப்பாயாக இதயமே...!


Wednesday, July 8, 2015

சுஜாதாவை அணுகல்-சரித்திரத்தின் சபதத்தோடு இரு காதல்



பதிவுலகின் சொந்தங்களுக்கு அதிசயாவின் அன்பான வணக்கங்கள்!
சுஜாதாவை முதல் முதலில் அணுகியிருக்கிறேன் இனி மெல்ல அவர் வார்த்தைகளின் விரல் பிடித்து அழகாய் அறிந்து கொள்வேன்.
"சுஜாதா" இந்த பெயருக்கான நேசிப்பு வட்டம் மிக விசாலமானது.ஒவ்வொருவரும் தனக்குரியவராக கொண்டாடும் இந்த ஆளுமையை அனுபவிக்க வாய்த்தஅவரது முதல் நூல் "ரத்தம் ஒரே நிறம்"
இது விமர்சனம் அல்ல என் விளக்கம் மட்டுமே.


அவரது இரண்டு சரித்தில நாவல்களில் ஒன்று இது.ஆங்கிலேய ஆட்சியில் நிஜமாய் குருதி பீறிட்ட "சிப்பாய் கலகத்தை"அதாவது ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ந்த இந்திய சிப்பாய்களின் கலக வரலாற்றை ஆதாரமாக்கி கூடவே  வைராக்கியமே நிறமாகி நினைவாகி ஓடும் முத்துக்குமரன் எனும் இரும்புத் தமிழனை கதையிடை செலுத்தி ,வெள்ளெயன் மீது அவன் கொண்டதீரா வெறுப்பையும் முறுக்கேறி புடைத்த புயங்களையும் உந்துசக்தியாக்கி விறுவிறுப்பு வேகத்துடன் பின்னப்பட்டது தான் இந்த சரித்திர நாவல்.

பக்கங்களை பாய்ந்து பறந்து புரட்டா வண்ணம் எனை போல் சாமானியனையும் நிதானமாக ஓரு காதல் தைத்துப் போகிறது.தந்தையை கொன்ற வெள்ளெக்கார துரையை கொன்றே தீருவேன் என விதி செய்த சிலம்பக்காரன் முத்துவிற்கும் ,வித்தையோடு வசீகரமும் சரிவிகிதம் நிரம்பிய சொன்னால் இனிக்கும் பூஞ்சோலைக்குமாய் ஒரு காதல்.இந்தக் காதல் தான் அவனை தப்புவித்து பல தடவை ஆயுள; நீட்டியது.இறுகிய வரப்பின் மேல் ஈரம் குழைத்து ஓடும் சிறுவாணி போல்.

இன்னொரு காதல். அதை இப்படிச்சொல்வேன். இப்போதுதான் விரிந்த மல்லிகையும் அதன் இதழ் ஓரம் கசியும் பியானோ இசையும் போல.இது சீமாட்டி எமிலி மற்றும் கப்டன் ஆஷ்லி வரைந்த காதல்.மிக மிருதுவாய் ஆஷ்லி இழைத்த காதல்.இந்த மென்மைகக்குள் ஒட்டிக்கொண்ட தாமதத்தால்  கேசேராது தொலைவான துயரக்காதல்.


சுவாரஸ்யம் என்னவென்றால்எமிலி சிறைப்பட்ட தங்கச்சிறைக்கூடம் மக்கின்ஸி அதாவது முத்து கொல்லத்துடிக்கம் துரை.பலதடவை முத்துவை துரையிடமிருந்து காப்பாற்றியது எமிலியை மென்மையாய் ஸ்நேகித்த ஆஷ்லி.

சிப்பாய் கலவரத்தை அடக்க சென்னையிலிருந்து புறப்பட்ட ஆங்கிலேய மற்றும்  ஆங்கிலோ இந்தியப்படைகள். ஈற்றில் வரலாற்றின் சுவரோரம் முற்றுகையிடப்படுகையில் ஆங்கிலேய ரத்தம் ஆறானது என்றால் இந்தியக்குருதியும மற்றொரு புனலாகி விரிகிறது.முத்துவின் சபதம் வெல்கிறது.துரை கொல்லப்படுகிறான்.பூங்சோலையின் காதல் தனிமையின் பெரு விசும்பாய் கனக்கிறது முத்துவும் மற்றொரு பிணமாய் சபதத்தின் முடிவருகில் மாண்டுபோனான்.

வரலாற்றின் குரூரங்கள், வழி நெடுகிலும் கலகமாய் கண்ணீரமய் நீள்கிறது.யார் குருதி என்று அறியா அடத்தியான ரத்தம் இன்னும் எங்கள் கால்களில் பிசுபிசுக்கிறது.அது கண்டங்கள் தாண்டி நிலங்களை ஊடறுத்து தேசத்தின் சாலைகள் எங்கிலும் அதற்கென்ற  பிரத்தியேக கதைகளுடன்  வடிந்தபடிதான்இருக்கிறது.எதுவாயின் மறுப்பின்றி ரத்தம் ஒரே நிறம்.

சுஜாதாவை என்னுள் அனுபவித்த தருணம்  மீண்டும் இதமாய் இறுக்கமாய் தொடரும் அந்த  பியானோ மல்லிகை வாசம் தான்.எமிலி என்னும் அந்த வாசம் ஆஷ்லியை தவிப்போடு இறுக அணைக்கிறது.எங்கெங்கோ அலைந்து வந்த  நதியொன்னு நீக்கமற நிரந்தரமாய் சமுத்திரத்துள் அடங்குவது போலொரு அணைப்பு.இங்கு எமிலி மாற்றான் மனையாள் ஆன போதும் ஒரு வாசகிறாய் எனக்குள் முகம் சுழிக்கும் எண்ணமோ இந்த   கண்ணியக்காவலாளியிடம் தோன்றவில்லை.

நானும் அவர்களோடு சேர்ந்து அந்த அணைப்பை கொண்டாடிக்கொண்டிருந்தேன்.
இந்த நாவலின் காட்சிப்புலத்தின் முற்பகுதியின் சாயலை இன்று உணர்ந்தேன் மதராசப்பட்டினம் திரைப்படைப்பில்.



நன்றிகளுடன்
-அதிசயா-

Monday, June 29, 2015

ஸ்நேக ஸ்பரிசம்


என் அதிகாலை துயிலொன்றின்
கதகதப்பு நீ ப்ரியமே-இனி
உனை போர்த்தபடியே 
இந்த கனவுகள் தொடரட்டும்
இன்று காலைக்கோப்பி வேண்டாம்்
கிண்ணங்களில் நிரம்பும் ஸ்நேக ஸ்பரிசம் போதும்


ப்ரியமே
எப்போதும; ஓர் அசரீரி போலவே  நீஆரம்பிக்கிறாய்
ஈற்றில் காதோரம் பெரும்கடலாய் நிறைந்து கொள்கிறாய்
காதல் இன்னும் ஊற்று அதில்
கரைந்து போவோம்
வேறு எப்படி கரையேறுவது♪♪


உன்
சிறு தடம் பற்றி இடம் சேருவேன்
உயிர் தவம் போல உனில் மீளுவேன்
குழல் நீயாகி இசை ஊறுவேன்_முதல்
பனிபோல உனை மூடுவேன்
இனி மொழி குழைந்தோடஉனை பேசுவேன்♪♪
அந்த நிர்மலப்பின்னிரவே
காதோரம் தேனடை பூசிடவா..
மெய் தழுவிய சிறுமூச்சே
உயிர்க் காட்டில் ஸ்நேகங்கள் மூட்டியே வா♪


பேரன்பே
மற்றொரு மழைக்கொத்தாய் என்வானம் இறங்கினாய்்்்
ப்ரியமே!!!!!
இம் மழைவெளியில் வடியும்
உன் நுனி விரல் துளிகளில் வழுகுதல் அன்றி
பெருமோட்சம் ஏதுமுண்டோ
ஸ்பரிசங்கள் ஊற்றும் அத்துளிகளின்
கதகதப்பில்
என் ஜென்மம் உடைந்தொழுக
மெதுவாய் மெதுவாய் கரையேனோ♪♪♪♪


Related Posts Plugin for WordPress, Blogger...