Thursday, August 20, 2015

ப்ரியமுள்ள...........!


ப்ரியமே...!
இந்தக்கூதிர் காலத்தின் ஈற்று நாழிகை வரை உனை அங்கேயே தரித்துக்கொள்்சினம் உண்டாக்காத மஞ்சள் வெயில் காலத்தின் பிரம்மிப்புக்களை பற்றி முன்பொரு ஓலையில் நீ வரைந்ததாய் ஞாபகம்ப்ரியக்குழந்தாய் உணரப்படாத கொண்டாட்ட கோஷங்களை காட்டிலும் மௌனம் மட்டுமே அடர்ந்துள்ள தனிமை வெளி ரம்மியமானது என்பதை உணர முயல்வாயாக

வேகமான இந்த ஓட்டங்களில் உனக்குளிருக்கும் அந்த கலைஞனை உயிர்ப்பிக்க முயன்றுபார்
அறிவாயா வானமே கூரையென்றபடி மெதுவாய் ஓர் ராகம் உண்டுபண்ணியபடி மூச்செடுப்பதில் உள்ள சுகத்தை.முதலில் உன்னை செரிமானம் செய்துவிடு்.பிறகு புதிதாய் ஓர் உயிர் ஊறும் பார்
இதை நிச்சயமாய் நீ உணர்வாய்.இக்கூதிர் காலத்தின் அழுகைகளில் எனை கரைத்துக்கொண்டிருக்கிறேன்.இது தீர்ந்ததும் நானும் உன் மலைத்தேசம் புறப்படுவேன்.அதுவரை எல்லாப்புலர்வுகளையும் உள்வாங்கு

எந்தக்கண்டிப்பும் உனக்கு இல்லை்.கையிவிருந்து புறப்பட்ட சோப்குமிழிகளை  போல் பொழுதுகள் உனை இயக்கும் திசையெங்கும் போ...எந்த ஆசானும் தரமுடியாத ஆச்சர்யங்களை இக் கணங்கள் ஊற்றிக்கொண்டிருக்கின்றன.உன்னுள்ளே வாழும் அக்கலைஞன் மீண்டு எழுகிறான் பார்.மீண்டுமொருமுறை இது பற்றி எழுதுவது வாய்க்காது போகலாம் ப்ரியமே
நான் காண நினைத்த பெரு வெளிச்சத்தின் உன்னால் வாழமுடியுமாயிருக்கிறது.என்னால் தீர்மானிக்க முடியாது போன என் இளமை  போலன்றி உன் தீர்மானங்களில் சுதந்திரம் நிறைந்து கிடக்கிறது.என்னை நனைக்கட்டும் என நாளும் ஏங்கிய ஆதித்துமி உன் கேசக்கோட்டோடு வழிகிறது.என் பிரியமே எல்லைகள் நிறுவப்பட்ட ஆயுளில் தித்திப்பான இப்பொழுதுகளை இட்டு நிரப்பிக்கொள்.உன்னை சூழ்ந்துள்ள பெருவிருட்சங்களின் இனிமையான உன் பால்யத்தின் குறிப்புக்களை பொறித்து வை

என் ப்ரியமே மானுடர் யாருமேயில்லை உனை சூழ.நிர்ப்பந்தங்கள் ஏதுமின்றி உன் மீதமுள்ள நாட்களை நிறுவிக்கொள்.புரண்டெழு குதி.பள்ளத்தாக்குகளெங்கும் உன் குழந்தைமையை அணைத்தபடி புரண்டெழு.நீ ஆண் என்றோ பெண் என்றோ விபரிக்க வேண்டியதில்லை ப்ரியமே
எப்பொழுதில் எதுவாக தோன்ற பிடிக்கிறதோஅதுவாய் இயங்கிக்கொள்.திருமணம் பற்றியோ என்ன குழந்தையை பிரசவிப்பதுஎன்றோ எந்தப்பேச்சுக்களின் வாடையும் சுமைபோல் உன்னை அழுத்தாதிருக்கட்டும் என ஆசீர்வதிக்கிறேன்.நீ என்பது நீ மட்டுடே என்ப்ரியமே.எதற்காயும் உனை தியாகிக்காதே.நீ என்பது நீமட்டுமே.அப்படியே இருந்துவிடு.

இதுபற்றி இன்னும் பேசவே ஆசையாய் இருக்கிறேன்.தீராக்காதலாய் இக்காட்சிகள் எனை தூண்டிக்கொண்டிருக்கின்றன.மொழிபெயர்ப்பு கவிதைகளை போல ஏதோ ஒரு ரகசியதை நோக்கி விரையத்தூண்டும் இக்கணங்கள்.

இயல்பான புன்னகை ஒன்றும் கூச்சமற்ற துயர அழுகை ஒன்றும் ஓரிடத்திலிருந்தே புறப்படுகின்றன.எனில் எப்புள்ளியில் இப்போது வாழ்கிறாய் நீ்??முன் இரவிலும் அதிகாலையிலும் பார் எத்தனை வர்ணப்பிரிகைகள்.வெளிகளில் தோன்றும் காற்றும் இக்கிளிகளின் பறத்தல்களும் எத்தனை முறைநிகழ்ந்தாலும் அத்தனை தடவையும் புதினமே...!பட்சிகளின் இறக்கைக்குள் சென்றுபார்.நேசிப்பின் மொழி அறிந்த அப்பறவையின் கதகதப்புத்தான் கருவறையை பிரதி பண்ணும்.அனுமதி்்்உன் ஆகாரத்தில் தானியங்களை அனுமதி்.அந்திமத்தின் நாட்களை போல் ஆரம்பத்தின் வழக்கங்களும் அவசியமே.

என் பிரியமே நாட்கள் மீளெழுவதில்லை நீ நன்கறிவாய்.அந்தி நாட்களில் நீ இசைக்கப்போகும் புல்லாங்குழல் கீதம் உன்னுடையதாய் மட்டுமே இருக்கட்டும் பிரியமே ஊற்றுக்களில் சுரக்கும் நேசத்தீர்த்தங்களை குடி,உனக்கான ராகங்களை நீ மட்டுமே தேடிக்கொள் உன்இஷ்ரப்படி.என் பிரிய சிநேகிதா இந்நாட்கள் பற்றி ஒரு குறிப்பெழுதி கற்றோடு விடுவாயா?
அழுது தீர்ந்துவிட்ட கடைசி நாளில் பேதக்கோபங்களற்று .உள்ளூறும் நெருப்புகளேதுமின்றி நான் நிதானமாவேன் .

அப்போது உன் குறிப்பு எனை இயக்கி அங்குகூட்டிப்போகும்
அதுவரை அங்கேயே தரித்திரு ப்ரியமே.

்்்அதிசயா்்்்

Monday, August 17, 2015

கடலாடிய கதைகள்

சொந்தங்களே அன்பு வணக்கம்...!
பயணங்கள் என்பது வெறும் களைப்பு சார்ந்ததில்லை அது அற்புதமான அனுபவத்தின் தூதன் என்று நம்புகிறீர்களா??இல்லையெனில் ஒருமுறை   நம்பியபடி சிறு பயணம் போய் வாருங்கள்.என் பல்கலை நண்பர்களுடன்  கிழக்கிலங்கையின் கடல்சார் இன்பங்களை துய்த்துக்கொண்டிருந்தோம்.
டலாடும் அனுபவங்கள் கிளர்ச்சிமயமானது.பொழுதொரு எழிலென தன்னை உடுத்திக்கொண்டிருக்கிரும் கடல் மடிக்குள் தான் எத்தனை  இன்பங்கள்.மீன்களோடும் கடற்கற்களோடும் கலந்திருந்தோம்.
கண்ணாடி போலொரு தண்ணீர் தேசத்தின் கால்களை கற்கள் பதம் பார்க்க நாங்கள் வலிமறந்து கடலாடினோம்.பின் மீண்டும் மற்றொலு கடலில் எங்கும் கண்டிராத குளிர்மையான நீரில் சிறு குழந்தைகள் போல் விழுந்து விழுந்து புரண்டுகொண்டிருந்தோம்.நம்புவீர்களா???அன்றே அங்கே சிலர் அதிதீவிரமாக நீச்சலடித்துக்கொண்டிருந்தோம் முதல்முதலில்.ஏதேதோ இராகங்களை மிக உல்லாசமாய் இசைத்தபடி  தோள்மீதும் மார் மீதும்  கடலில் உலவிக்கொண்டிருந்தோம்.
பெருத்த சந்தோஷம் நிறைந்த கொண்டாட்ட பயணம் அது.எப்போது நினைத்தாலும் என்றென்றைக்குமாய் கடலின் அடர்த்தி கொண்டு கனம் கூடிய நட்பின் அடர்த்தியில் கடலாடினோம்.



தொலைவுப்பயணங்களின் நினைவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது இந்தப்பொழுதுகள்
என் ப்ரியத்தின் நண்பர்களே...!
நேற்றய நீர்ப்பயணம் முழுவதும் சுயாதீனமாய் மிதந்துகொண்டிருந்தோம் என்பதை நினைத்து இன்னும் பிரம்மித்துக்கொண்டிருக்கிறேன் இந்த சாலை முழுவதும்.

அந்தப்பாடல்களில் சுருதி இல்லை
சாலை உணவகங்களில் குளிரூட்டி இல்லை
ஆனாலும் கடல்போலவும் மலையை ஒத்ததுமான
விசாலமான குளிர்மையில் கிறங்கிக்கிடந்தோம்♪
மூழ்குவதும் பின் மாறிமாறி தாங்குவதுமாக உச்சி குளிந்தோம்.
உயரங்களில் ஏறி பின் நட்பில் கைகோர்த்து ஆழங்களில் சென்றிருந்தோம்.

ஆணென்றும் பெண்ணென்றும் யாதொன்றும் அறியாத நேசத்தில் நட்பு நட்பு என்று சொன்னபடி
அந்தப்பொழுதுகளை கொண்டாடிக்கொள்வோம்♪
தேவதைகளே எங்களை ஆசீர்வதியுங்கள் எல்லோரும் என்றென்றும்

வாழ்கவென♪♪
Related Posts Plugin for WordPress, Blogger...